8/12/11

முதல் முதலாக அவனுடன் போனில்

அவனையே அவன் நண்பர்கள் பார்த்து கொண்டு இருக்க, மெல்ல திரும்பினான் சரவணன். அவன் முன் இருந்த கவரை கவனமாக திறந்தான். அதில் பணம் இருந்தது. அதை பற்றி அவான் கலங்க வில்லை. கூடவே ஒரு பிட்டு பேப்பர் இருந்ததி பாத்தான். அதை எடுத்து படித்தான். அப்போது, அவன் கண்கள் தழும்புவது போல இருந்தது . அடக்கி கொண்டான். அதில் அவள் போன் நம்பரும் இருந்தது. அவன் அவளை திரும்பி பார்த்தான். அவள் அப்போது அவள் பாடி முடித்துவிட்டு மேடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாள்.

அவள் பார்வை சரவணனை விட வில்லை. இருவரின் கண்களும் சந்தித்தது. பல விஷயங்களை பேசி கொண்டது போல இருந்தது. சரவணன் தன் மொபைல் போனை எடுத்து அவள் குறிப்பிட்ட நம்பரை அழுத்தினான். அவளின் போன் அடிக்க அவள் எடுத்தாள். அப்போது கட் செய்தான். ஒரு மெசேஜை பூர்த்தி செய்து விட்டு அவளுக்கு அனுப்பினான். அவளும் ஓகே என்று பதில் அனுப்பினாள். சரவணன் எழுந்து அவன் நண்பர்களோடு வெளியே போனான்.


அவன் நண்பர்கள் அவனை கலாய்த்து கொண்டு இருந்தனர். ஆனால் சரவணனின் மனது அவள் பக்கமே இருந்தது, அதனால் எதையும் அவன் கண்டுக்கவில்லை. அவன் பைக்கில் ஏறி விட்டு கிளம்பினான். அன்று வீட்டில் அவனுக்கு சுமாராகத்தான் தூக்கம் வந்தது. கனவில் அவள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு இருந்தாள். சரவணன் திரும்பி திரும்பி படுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சரவணன் நன்றாக பிறேக்டிகலான டைப்புதான், இருந்தும் அவன் மனது அலைபாய்ந்து கொண்டு இருந்தது.


அடுத்த நாள் காலை அவனுக்கு போன் வந்தது. அது அவளுடைய போன் நம்பர். அவளின் பெயர் தெரியாததால். சிங்கர் என்று போட்டு சேவ் செய்து இருந்தான். "ஹலோ" என்று அவன் சொல்ல, மறு முனையில் நிசப்தமாக இருந்தது. மீண்டும் "ஹலோ" என்றான். அப்போது மறுபக்கத்தில் லேசாக விசும்பும் சத்தம் கேட்டது. சரவணன் சற்று அமைதியாக இருந்தான். அவளுக்கு சற்று ஆகாசம் கொடுத்தான். "நான் உங்களை பாக்கணும்" என்று நேராக விஷயத்துக்கு வந்தாள்.


அந்த குரலில் ஒரு மேன்மை, கெஞ்சல், ஏக்கம் எல்லாமே இருந்தது. ஒரு நிமிடம் இது நாகன் ஸ்டைலில் அமையபோகிறதோ என்று குழம்பினான், பிறகு, அவன் பேசினான் "எதுக்கு என்னை பாக்கணும்?" என்றான். "அன்னிக்கு என் அப்படி போனீங்க?" என்றாள். "அதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றான். "இல்லே நீங்க சொல்லணும். என்னாலே அன்னிலிருந்து தூங்க முடியலை, எதுவுமே செய்ய முடியலை. நேத்து உங்களை பாத்தவுடன் தான் எனக்கு உயரே வந்தது போல இருந்தது" என்றாள்

கருத்துகள் இல்லை: