8/12/11

என் காதலனா என் உயிரா

பைக்கை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டவுடன், ரேகா இறங்கினாள். சரவணனும் இறங்கியவன், ஒன்றும் பேசாமல் நடந்து செல்ல, ரேகா அவன் பின்னால் சென்றாள். சரவணன் ஒரு ஹோட்டலுக்கு சென்று வெளியில் ஒரு டேபிளில் உட்கார, ரேகா மௌனமாக அவன் எதிரே உட்கார்ந்தாள். சர்வர் வர, ரேகாவை பார்த்தான் சரவணன். அவள் ஒன்றும் பேசாமல் இருக்கவே, சரவணன், "ரெண்டு கட்லெட்" என்றான். சர்வர் செல்ல, சரவணன் அவளை பார்த்து, "நான் எங்கே கூப்ட்டாலும் அப்படியே வந்தருவியா, எங்கே என்று கேக்க மாட்டியா?" என்றான்.

அதற்க்கு பதில் எதுவும் பேசாமல், தலையை குனிந்தாள். "கேக்கறேநில்லே" என்று அதட்டுவது போல அவன் கேட்க, அவள் தலை நிமிர்ந்து நேராக அவன் கண்களை பார்த்து, "உன்கூட வரும் போது நான் எதுவும் கேட்கமாட்டேன். உன்னோடு இருக்கும் போதுதான் நான் எல்லாமே மறந்து பாதுகாப்பாக இருக்கேன்" என்று சொலிவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள். அதற்குள்ளாக சர்வர் இரண்டு தட்டுகளில் கட்லெட்டை கொண்டு வந்து வைக்க, இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தார்கள்.


"என்மேலே அவ்வளவு நம்பிக்கையா?" என்றான், ஆம் என்பது போல தலையை ஆட்டினாள். கொஞ்ச நேரத்தில் காபியையும் குடித்துவிட்டு, "போலாமா" என்றான். அவள் எழ, இருவரும் பைக் இருக்கும் இடத்திருக்கு சென்றனர். "நாம பாண்டிச்சேரி போறோம். அங்கே எனக்கு தெரிந்த ஒரு ரெசார்ட் இருக்கு, அங்கே தங்க போறோம்" என்றான். ரேகா தலையை குனிந்த வாறே ஓகே என்பது போல தலையை ஆட்டினாள். அவன் ஏறி பைக்கை ஸ்டார்ட் செய்ய இவள் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.


இந்த முறை அவன் மேல் இவளுக்கு இருக்கும் அன்பை காட்ட கட்டு படுத்த வில்லை. ஏறி உட்கார்ந்த உடன் அவன் இருப்பை நன்றாக கெட்டியாக பிடித்து கொண்டாள். சரவணன் மெல்ல பைக்கை நகர்த்தி மெல்ல ஸ்பீட் அதிகரித்து கொண்டே போனது. அப்போது மணி ஐந்து. இன்னும் ஒரு மணி நேரத்தில் பாண்டிச்சேரியை வந்து அடைந்து விடுவார்கள். சரவணனுக்கு இது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் அதற்க்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று மனதுக்குள் ரேகா நினைத்து கொண்டாள்.


இந்த முறை ரேகா ஹெல்மெட்டை அணிந்து கொள்ள வில்லை. தன் முகத்தை அவன் முதுகுக்கு திடுவது போல வைத்து கொண்டாள். அப்போது அவன் கழுத்து பக்கத்தில் இருந்து வந்த வாசம் அவளை ஈர்த்தது. அதுதான் ஆணின் வாசம். எத்தனையோ பேருடன் அவள் அம்மணமாக படுத்து ஒத்திருந்தாலும், அவள் இந்த வாசத்தை உணர்ந்தது இல்லை. இதுதான் அவள் இந்த வாசத்தை உணரும் முதல் தருணம். அப்படியே கண்களை மூடி கொண்டு தன் முகத்தை அவன் முதுகோடு சேர்த்து வைத்து கொண்டாள்

கருத்துகள் இல்லை: